தேமுதிகவின் செல்வாக்கு அதிகரித்தபடியேதான் உள்ளது- விஜயகாந்த்
சென்னை: தேர்தலுக்குத்தேர்தல் தேமுதிகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 863 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2006 உள்ளாட்சித் தேர்தலில் பெற்றதைவிட கூடுதலாக 248 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேமுதிக தனித்துப் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் ஆதரவு அதிகரித்து வந்துள்ளது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் சுமார் 28 லட்சம் வாக்குகளையும், 2009 மக்களவைத் தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளையும், இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 35 லட்சத்து 64 ஆயிரத்து 74 வாக்குகளையும் தேமுதிக பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், சில இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது தேமுதிக என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications