Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரண்பேடி எங்களிடம் அதிகமாக பணம் வசூலித்துவிட்டார்! - தன்னார்வ அமைப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

Kiran Bedi
மும்பை: முன்னாள் போலீஸ் அதிகாரியும் ஹஸாரே கோஷ்டியின் முக்கிய புள்ளியுமான கிரண் பேடி எங்களிடம் பொய்யான பில்களைக் காட்டி அதிக பணத்தை வசூலித்துவிட்டார் என்று மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ஏவியேஷன் இன்டஸ்ட்ரி எம்ப்ளாயீஸ் கில்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கிரண்பேடி இவ்வளவு அதிக தொகை வசூலித்தது, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட பிறகே தங்களுக்குத் தெரியும் என்றும், இது தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அந்த அமைப்பின் தலைவர் ஜார்ஜ் கிரகாம் கூறியுள்ளார்.

பொது நிகழ்ச்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள கிரண் பேடிக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் ஏராளமாக பணம் வசூலிக்கிறார், கட்டணமாக. இதைத் தவிர, அவருக்கு விமானப் பயணக் கட்டணம் வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர் என்பதால் கிரண் பேடிக்கு விமானக் கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை தரப்படுகிறது. இந்த சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் அவர், ஏற்பாட்டாளர்களிடம் பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தைக் கேட்டு வசூலித்துக் கொள்கிறார். இப்படி அதிகமாகப் பெற்ற பணத்தை தனது தலைமையில் இயங்கும் ட்ரஸ்டில் அவர் செலுத்தியுள்ளார்.

அவரது இந்த செயல் சட்டப்படி தவறானதே ஆகும். பணியிலிருந்த போதே அவர் இதுபோல செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த உண்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, 12க்கும் மேற்பட்ட ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது. அதிர்ச்சியடைந்த கிரண்பேடி, என்ன சொல்வதென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பித்தார்.

ஆமாம், நான் இப்படி அதிக பணம் பெற்றது உண்மைதான். நான் இப்படி பெற்றது பணம் கொடுத்தவர்களுக்கே தெரியும் என முதலில் அவர் கூறினார்.

ஆனால் அடுத்த சிலமணி நேரங்களில், பணம் கொடுத்த தன்னார்வ அமைப்புகள் பல கொதித்துப் போய், கிரண் பேடியை திட்ட ஆரம்பித்துவிட்டன. ஹைதராபாதைச் சேர்ந்த அமைப்பு ஒன்று கிரண் பேடி செய்தது அவமானத்துக்குரியது என்றும், இதைவிட எங்களிடம் நேர்மையாக உண்மையைச் சொல்லி அதிகப் பணத்தை கேட்டே வாங்கியிருக்கலாமே என்றும் கூறியிருந்தது.

அதுவரை அன்னா குழுவை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த அத்தனை பேரும், கிரண் பேடியின் கேவலமான மோசடி, அல்பத்தனத்தைக் கண்டு பெரிதும் அதிர்ச்சியடைந்து 'Corrupt Team Anna' என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதைக் கண்டு மேலும் பதட்டத்துக்குள்ளான கிரண் பேடி, தனது உளறலின் அடுத்த கட்டமாக, அன்னா ஹஸாரேவோடு இணைந்து ஊழலை எதிர்க்கப்போராடும் தன்னை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதாகவும், வேண்டுமானால் தன்னை தூக்கில் போடட்டும். அப்படியாவது அன்னாவின் இயக்கத்தைக் காக்க வேண்டும் என்றும் வார்த்தைகளைக் கொட்டினார்.

இது மேலும் பல விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன. தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள மனமின்றி, மக்களின் இரக்கத்தைப் பெற இஷ்டத்துக்கும் உளறுகிறார் கிரண்பேடி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஏவியேஷன் இன்டஸ்ட்ரீஸ் கில்ட் எனும் தன்னார்வ நிறுவனம் கிரண் பேடி தங்களிடம் அதிக பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத் தலைவர் ஜார்ஜ் ஆப்ரஹாம், தி ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களிடம் கிரண் பேடி அதிகமாக வசூலித்திருக்கும் உண்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை பார்த்த பிறகுதான் தெரிந்தது.

இது அநியாயம். அவர் பதவிக்கும் அந்தஸ்துக்கும் பொருத்தமில்லாத, நேர்மையற்ற செயல். இதைவிட அவர் எங்களிடம் பணம் கேட்டுப் பெற்றிருக்கலாம்.

குறிப்பிட்ட எங்கள் விழாவுக்கு புனேயிலிருந்து வந்துள்ளார் கிரண் பேடி. அதே நாளில் இவர் வேறொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். எகானமி க்ளாஸில் வந்த அவர் பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். அதுவும் டெல்லி - மும்பை மார்க்கத்துக்கு. அதே தேதியில் மும்பையில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதற்காகவும் தனியாக இரு வழி விமானக் கட்டணத்தைப் பெற்றுள்ளார்.

ஒரு பயணம்தான். ஆனால் இருவரிடமும் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட். அதுவும் வராத ஊரிலிருந்து வந்ததாக கணக்கு காட்டியுள்ளார். இது எத்தனை மோசடியானது! இவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்," என்று கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு கிரண் பேடி கூறியுள்ள பதிலில், "சேமிப்பு என்பதை ஒரு குற்றமாகப் பார்க்கிறீர்களே... இது ஆச்சர்யமாக உள்ளது. நான் அந்த நிகழ்ச்சிக்கு பணம் பெறவில்லை. ஆனால் உயர் வகுப்பு விமானக் கட்டணம் பெற்றேன். நான் சிக்கன வகுப்பில், சலுகையில் பயணம் செய்தேன். மீதிப் பணத்தை எனது ட்ரஸ்டில் சேமித்தேன். இன்னொரு நிகழ்ச்சிக்கு நான் என்ன பெற்றேன் என்பது தேவையற்றது. இது நிச்சயமாக சேமிப்பு. சேமிப்பை நீங்கள் குற்றம் என்பீர்களா?" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+