திருவண்ணாமலை: ரூ.30 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவன்
கலசப்பாக்கம்: பள்ளி மாணவனை கடத்தி வைத்து கொண்டு, 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுக்கும் மர்மகும்பலை பிடிக்க 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த வெளுகனந்தலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(43). மத்திய பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு வினோத் குமார்(12) என்ற மகன் உள்ளான். அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 20ம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த வினோத்குமார், திடீரென மாயமானார்.
இரவு நெடுநேரமாகியும் வினோத் குமாரை காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் வினாத்குமார் கிடைக்கவில்லை. இதனால் கலசப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். மேலும் வினாத்குமாரை காணவில்லை என நோட்டீசு அடித்து பல இடங்களில் ஒட்டினர்.
இந்த நிலையில், வினோத் குமாரின் பெரியப்பா சம்பத் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க 30 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தால், சிறுவனை கொலை செய்து விடுவோம் எனவும் மர்மநபர் மிரட்டி உள்ளார். அதன்பின் வினோத்குமாரின் தாய் பரிமளாவை தொடர்புக் கொண்ட மர்மநபர், அவரிடமும் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து வினோத் குமார் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். கடத்தப்பட்ட வினோத்குமாரை கண்டுபிடிக்க, போளூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு முகமது பலுலுல்லா, கலசப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் கலால் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வினோத்குமாரை தேடி சென்னை, பெங்களூர் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வினாத்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications