அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட திருமண மண்டபத்திற்கு 'சீல்'
Subscribe to Oneindia Tamil
மதுரை: வண்டியூரில் அனுமதியின்றி தீபாவளிக்கு பட்டாசு விற்பனை நடந்திய திருமண மண்டபத்துக்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.
மதுரை வண்டியூர் சாலையில் பழனிராஜ் மகால் என்ற திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்து வந்தனர். உதவி கமிஷனர் வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் அந்த திருமண மண்டபத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த மண்டபத்தில் அனுமதியின்றி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்தது தெரிந்தது. மேலும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட அரண்மனைபாண்டி, பழனி மற்றும் மண்டபத்தை வாடகைக்கு அளித்த உரிமையாளர் சீனிவாசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும் திருமண மண்டபத்திற்கும் 'சீல்' வைத்தனர்.












Click it and Unblock the Notifications