For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட மறுத்த மனைவியின் மூக்கு, உதடுகளை அறுத்த கணவர் கைது: பாகிஸ்தானில் நடந்த கொடூரம்

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளின்போது நடனமாட மறுத்த மனைவியின் மூக்கு மற்றும் உதடுகளை அறுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், வெஹாரி நகரைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ். அவரது மனைவி குல்ஷன் பீபீ. திருமணங்களுக்கு சென்றால் அங்கு நடனமாடுமாறு அப்பாஸ் குல்ஷனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நடனமாட முடியாது என்று தொடர்ந்து குல்ஷன் மறுத்து வந்துள்ளார்.

தான் இவ்வளவு வற்புறுத்தியும் தனது மனைவி நடனமாட மறுக்கிறாரே என்று அப்பாஸ் ஆத்திரம் அடைந்தார். கோபம் கண்ணை மறைக்க அவர் தனது மனைவியின் மூக்கு மற்றும் உதடுகளை அறுத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பாஸை கைது செய்தனர்.

குல்ஷன் பீபீ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

English summary
A man has been arrested in Pakistan's Punjab province for allegedly chopping his wife's nose and lips as she refued to dance at weddings. The poor wife is admitted in a hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X