முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது ஊழல் வழக்கு பதிவு
பெங்களூர்: கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் பணிகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1995ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்தபோது தேவே கௌடா கிருஷ்ணா நதிநீர் திட்டப் பணிகளை பிரித்துக் கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த திட்டம் தொடர்பான நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களில் யாரையும் கலந்தாலோசிக்காமல் ஒரே இரவில் கையெழுத்திட்டுள்ளார். ரூ. 400 கோடி மதிப்பிலான பணிகளை தேவே கௌடா தனியார் கான்டிராக்டர்களுக்கு கொடுத்துள்ளார். இது குறித்து சோமசேகர ரெட்டி என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிஐடி போலீசார் தேவே கௌடாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனையாகி ஒடுங்கிய விஷயம் தற்போது மீதும் தேவே கௌடாவுக்கு தலைவலி ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் தேவே கௌடா பிரதமாராக பதவி ஏற்பதற்கு முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்குகளில் சிக்கி கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஒரு பக்கம் சிறையில் இருக்க மறுபக்கம் தேவே கௌடா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications