போஸ்னியா அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

Subscribe to Oneindia Tamil

சரஜிவோ: போஸ்னியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு நடத்திய செர்பியாவை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

போஸ்னியா நாட்டின் தலைநகர் சரஜிவோவில் அமெரிக்க நாட்டு தூதரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வழியாக நீண்ட தாடியுடன் ஒரு நபர் நடந்து சென்றார். அப்போது அந்த நபர் திடீரென தூதரகத்தை நோக்கி கலாஷ்னிகோவ் வகையை சேர்ந்த தானியங்கி துப்பாக்கி மூலம் சரமாரியாக சுட ஆரம்பித்தார். அதை கவனித்த தூதரக பாதுகாப்பு போலீசார் அதை எதிர்த்து சுட்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ்காரர் மற்றும் தானியங்கி துப்பாக்கியால் சுட்ட நபரும் காயமடைந்தனர். காயமடைந்து கீழே விழுந்த அந்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் செர்பியாவை சேர்ந்த மெவுல்தின் ஜசா ரெவிக்(23). இவர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தூதரக ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+