மரியம் பிச்சையின் மகனுக்கு திருச்சி துணை மேயர் பதவி!
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக எம்.ஆசிக் மீரா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆவார்.
சென்னை உட்பட 10 மாநகராட்சிகளுக்கு துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் நேரடியாகத் தேர்தல் நடந்தது. அதில் அனைத்து மேயர் பதவிகளையும் அதிமுகவே பிடித்தது. பெரும்பாலான கவுன்சிலர் பதவிகளையும் அதிமுகவே பிடித்துள்ளது.
இந் நிலையில் 10 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிமுக சார்பில் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று ஜெயலலிதா அறிவித்தார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளதால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே துணை மேயர்களாகவுள்ளனர்.
இதில் திருச்சி துணை மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக எம்.ஆசிக் மீரா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆவார்.
மரியம் பிச்சையின் மறைவையடுத்து திருத்தி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தபோது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கே ஜெயலலிதா வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பரஞ்சோதியை வேட்பாளராக்கி வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா. இந் நிலையில் மரியம் பிச்சையின் மகனுக்கு துணை மேயர் வாய்ப்பைத் தந்துள்ளார்.
இவர் திருச்சி மாநகராட்சியின் 27-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications