அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது
ஏரல்: அந்தமானுக்கு சென்ற தமிழக ஜோதிடர்கள் இருவர் பரிகாரம் செய்வதாகக் கூறி அங்குள்ள 3 பேரிடம் 30 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அந்தமான் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஏரல் அருகே உள்ள சூலைவாய்க்கால் மகா கணபதியார் புரத்தைச் சேர்ந்தவர் அழகிரி மகன் கணேசன். இதே ஊரைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் வேல்முருகன். இவர்கள் இருவரும் ஜாதகம் மற்றும் குறி சொல்லி வந்தனர். அவர்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி பணம் வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு கணேசனும், வேல்முருகனும் அந்தமானுக்கு சென்றனர். தெற்கு அந்தமான் கேப்டவுனில் வசித்து வரும் கண்ணன், போர்ட் பிளேயர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த திருச்செல்வம் மகன் காளிமுத்து, தெற்கு அந்தமானில் உள்ள மணிகண்டன் ஆகியோரது வீட்டுக்கு சென்று ஜாதகம் மற்றும் கைரேகை பார்த்தனர்.
அப்போது உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது என்று பயமுறுத்திய அவர்கள் இதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ரூ.25,000 வசூலித்தனர். பின்னர் அங்கேயே யாகம் நடத்தினர். அதன் பின்னர் இங்கு மட்டும் பூஜை செய்தால் போதாது. எங்கள் சொந்த ஊரி்ல் உள்ள கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி நகைகளை கேட்டனர்.
கண்ணனிடம் 10 பவுன் நகை, காளிமுத்துவிடம் 15 பவுன் நகை, மணிகண்டனிடம் 5 பவுன் நகை என மொத்தம் 30 பவுன் நகைகளையும், பூஜைக்காக ரூ. 2 லட்சம் ரொக்கத்தையும் வாங்கிக் கொண்டு தமிழகம் திரும்பினர். பூஜை முடிந்த பின்னர் நகையை திருப்பி தருவதாக கணேசனும், வேல்முருகனும் தெரிவித்தனர். ஆனால் பல மாதங்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கண்ணன், காளிமுத்து, மணிகண்டன் ஆகியோர் அந்தமான் பாம்பிளாஸ்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா, ஏட்டுகள் ஹீமா சலம், மனோஜ் ஆகியோர் தூத்துக்குடி வந்து எஸ்பி நரேந்திர நாயரை சந்தித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துமாறு கூறினர். அவர்களது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜசக் மற்றும் குற்றப்பிரிவு ஏட்டு குமாரசாமி மற்றும் போலீசார் சூளைவாய்க்கால் சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த கணேசன் மற்றும் வேல்முருகனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து பணம், நகை மீட்கப்பட்டது. 2 பேரும் விசாரணைக்காக அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications