ஈரோட்டில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நிதி தணிக்கை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார்.

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் நகராட்சியின் கடந்த 2010-11 ம் ஆண்டுக்கான கணக்குகளை நிதி தணிக்கை அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர். ஆய்வாளர் மனோகரன்(54) தலைமையிலான குழு ஆய்வு செய்தபோது வரவு செலவு கணக்குகளில் பல குறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை சுட்டிக்காட்டிய மனோகரன் இதை வெளியே தெரியாமல் மறைக்க ரூ. 4 லட்சம் லஞ்சம் கொடுக்குமாறு கேட்டார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காசிபாளையம் நகராட்சி முன்னாள் செயல் அதிகாரி பழனிச்சாமி, எழுத்தர்கள் விஸ்வநாதன் ஆகியோர் அவ்வளவு பணம் தர முடியாது எனத் தெரிவித்தனர்.

சிறிதுநேர பேச்சுவார்த்தைக்கு பின் உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் ரூ. 3.5 லட்சம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்பணமாக உடனே ரூ.1 லட்சம் ரொகக்ம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

நேற்றிரவு மனோகரன் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் வாங்கிய ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+