நீதிமன்றத்தில் ஆஜகராகாமல் இருக்க பொய் சொன்ன ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவல்துறையினரின் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினரின் குறுக்கீடு கூடாது என்ற ஜெயலலிதாவின் அறிவுரைக்கும், நடைமுறைக்கும் எள்ளளவு சம்பந்தமும் இல்லை.
திமுக ஆட்சியில் மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் மிகச் சாதாரண குற்றம் ஒன்றுக்காக கைது செய்தபோது, பத்திரிகை ஆசிரியரை தகுந்த காரணமின்றி கைது செய்ய வேண்டாம் என்று காவல்துறையினருக்கு நான் கூறினேன். அதற்கு காவல்துறையின் நடவடிக்கையில் குறுக்கீடு என ஜெயலலிதா கடுமையாக சாடினார்.
ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் சென்னையிலுள்ள காவல்நிலையத்துக்கே அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் சென்று கட்சிகாரர்களை விடுவித்து அழைத்துச்சென்றனர். மதுபாட்டில்கள் பதுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் அமைச்சர் ஒருவர் தலையிட்டு அவர்களை விடுவிக்க நிர்பந்தம் செய்ததும் ஏடுகளில் வெளிவந்துள்ளது.
மூத்த பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்ய வேண்டாம் என்று கூறியதை குறுக்கீடு என்று அறிக்கை விட்ட ஜெயலலிதா, தற்போது அவரது ஆட்சியில் நடைபெறும் இத்தகைய செயல்பாடுகள் பற்றி என்ன பதில் கூறுகிறார்?
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தோல்விடையந்த அதிமுகவினருக்கு அதிகாரிகள் வெற்றி சான்றிதழ் வழங்கிய கொடுமை பல இடங்களில் அரங்கேறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு 34 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், திமுகவிற்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், சுயேச்சைகள் பெற்ற வாக்குகளை அதிமுகவின் கணக்கில் சேர்த்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்றும் இதழ் ஒன்று புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. இனிமேலாவது தேர்தல் ஆணையம் உண்மையான புள்ளி விவரத்தை வெளியிடும் என்று நம்புகிறேன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா, டெல்லி கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறி, கடந்த 22ம் தேதி மூன்றாவது நாள் விசாரணையைத் தவிர்த்துள்ளார். ஆனால் அவர் அன்றைய தினம் டெல்லிக்கு செல்லாமல் இருந்ததன் மூலம் உண்மைக்கு மாறான செய்தியை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications