ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்!

கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து கனிமொழியும் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் நீதிமன்றத்திலேயே அழுதனர்.
இந் நிலையில் ஜாமீன் நிராகரிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னதாக ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கனிமொழி நேற்று நீதிமன்றத்துக்கு உற்சாகமாக வந்தார். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டதும் கண்கலங்கிய அவர் பின்னர் சுதாரித்துக் கொண்டு அழுது கொண்டிருந்த தனது தாயாருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அங்கு வந்த திமுக தலைவர் துரைமுருகனிடம், அப்பாவை தைரியமாக இருக்கச் சொல்லுங்க என்றார்.
இந் நிலையில் ஜாமீன் நிராகரிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் முண்டியடுத்துக் கொண்டு கனிமொழியின் கருத்தைக் கேட்க, கோபமான அவர், நான் இப்போதைக்கு எதையும் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் மிகவும் வருத்தத்தில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று அண்ணா அறிவாலயத்துக்குக் கூட வரவில்லை.












Click it and Unblock the Notifications