மனைவியை அடித்த 'மாவீரன்' புடின்- பெண்கள் விஷயத்திலும் 'வீக்'!
இது குறி்த்து ஜெர்மன் நாட்டு செய்தித்தாளான பில்ட்-ல் வெளியான செய்தியை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
1980களில் விளாடிமிர் புடின் (59) ரஷ்ய உளவாளியாக ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. புடினின் மனைவி லுட்மிலாவுடன் (53) நட்பாக பழகிய ஒரு மொழிபெயர்ப்பாளர் ஏஜெண்டிடிடம், தனது திருமண வாழ்க்கைப் பற்றி லுட்மிலா தெரிவித்துள்ளார்.
புடின் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவார் என்றும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் லுட்மிலா தெரிவித்துள்ளார்.
புடின் கடந்த 1985ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை கிழக்கு ஜெர்மனியில் உள்ள டிரஸ்டென் நகரில் சோவியத் புலனாய்வு நடவடிக்கைகள் குழு தலைவராக இருந்தார். அப்போது தான் அவர் இவ்வளவு விஷயங்களையும் செய்துள்ளார்.
மேலும், கடந்த 1990ம் ஆண்டு புடின் தனது லிமோசின் காரில் முறைதவறிப் பிறந்த குழந்தையை விட்டுச் சென்றார் என்று ஏற்கனவே ஒரு வதந்தி இருந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள செய்தியைப் பார்க்கும்போது அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லுட்மிலா ஒருமுறை தனது நண்பர் ஒருவரிடம், அப்பாடா இன்று அவர் என்னை அடிக்காமல் இருக்கிறாரே என்று கூறினாராம். அதேசமயம், லுட்மிலாவுடன் 3 வாரம் இருப்பவர்களுக்கு கோவில் கட்டிக் கும்பிட வேண்டும் என்று முன்பு புடின் ஒருமுறை தெரிவித்திருந்தது நினைவருக்கலாம். இந்த லீலைகள் எல்லாம் செய்தபோது புடினுக்கு வயது 33தான்.
இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க புடினின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவி்டடார்.
வரும் 2012ம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் புடினுக்கு இந்த புதிய செய்தியால் பாதிப்பு உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.