மெத்தனமாக இருக்கும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல்: மேயர் விரட்டியடிப்பு
திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சியைக் கண்டித்து ஆயிரக் கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வெகு தாமதமாக வந்த மேயர் விசாலாட்சியை மக்கள் ஆவேசமாக முற்றுகையிட்டு அங்கிருந்து அகன்று போகச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் நேற்று திடீர் என்று மழை கொட்டித் தீர்த்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் தெருக்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல இடங்களில் மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கியுள்ளது. நீர் செல்லும் வழிகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்படாமல் உள்ளதால் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாக்கடை அடைப்புகள் மற்றும் நீர் செல்லும் வழியில் உள்ள அடைப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி மெத்தனமாக உள்ளது என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து மாநகராட்சியைக் கண்டித்து ஆயிரக் கணக்கான மக்கள் திருப்பூர் காங்கயம் சாலையில் மறியலில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மேயர் விசாலாட்சியும், அதிகாரிகளும் வந்தனர். ஓட்டு கேட்டு மட்டும் சரியான நேரத்தில் வரும் நீங்கள், மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் தாமதாக வருவதா என்று கூறி ஆயிரக் கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய மேயர் விசாலாட்சி அதிகாரம் தூள் கிளப்ப பேசியதால் மக்கள் அவரையும், அதிகாரிகளையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தது
நொய்யல் ஏற்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி 14 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று அங்கு வெள்ளம் வடிந்துள்ளது. குறிப்பாக ஜம்மனை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் மக்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications