பெண்ணை கேலி செய்ததை தட்டிக்கேட்ட வி. சிறுத்தைகள் நிர்வாகி கொலை: +1 மாணவன் உள்பட 5 பேர் கைது
திருச்சி: திருச்சியில் முன்விரோதம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வார்டு செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(41). ஆட்டோ டிரைவரான அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வார்டு செயலாளராகவும் இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி இரவு 12 மணிக்கு அவரை சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், +1 மாணவர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், மாரியப்பனுக்கும் இடையே கல்லூரி மாணவி ஒருவரை கிண்டல் செய்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் மாரியப்பன் பொதுமக்கள் முன்னிலையில் மணிகண்டனை கழுத்தில் கயிறு கட்டி இழுத்து சென்றுள்ளார்.
இதனால் அவமானமடைந்த மணிகண்டன், மாரியப்பனை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களான தில்லை நகரைச் சேர்ந்த மகாராஜா(20), ரயில்வே காலனியைச் சேர்ந்த +1 மாணவரான பாலாஜி(18), கிராப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர்(19), பொன்மலையைச் சேர்ந்த மணிகண்டன்(22), பெரம்பலூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(21), குமார் ஆகியோருடன் சேர்ந்து கொலைத்திட்டம் தீட்டினார்.
இந்த குழுவின் திட்டப்படி பாஸ்கர், பாலாஜி ஆகியோர் ஜங்ஷன் பகுதியில் ஆட்டோவில் நின்ற மாரியப்பனை சவாரிக்கு அழைத்தனர். ஆட்டோ பஞ்சப்பூர் பிரிவு சாலை அருகே சென்றபோது மணிகண்டனும், ஜெதீஸ்வரனும் பைக்கில் எதிரே வந்து ஆட்டோவை மறித்தனர்.
அதே பகுதியில் மறைந்திருந்த மற்ற 3 பேரும் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களால் மாரியப்பனை சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மாரியப்பன் இறந்ததை உறுதி செய்த கும்பல் உடலை அப்பகுதியில் உள்ள கழிவுநீர் குட்டையில் ஏறிந்துவிட்டு தப்பியோடிவிட்டது.
இதனையடுத்து மகாராஜா, பாலாஜி, பாஸ்கர், மணிகண்டன், குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.
-
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications