திருநெல்வேலியில் ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு வளாகம் – ஜெ. அனுமதி

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டு மையம், அரசு இசைப் பள்ளி, கலை மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலை பண்பாட்டு வளாகம் ஒன்றை ஒரு கோடி ரூபாய் செலவில் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

கலை பண்பாட்டு வளாகம்

எனது தலைமையிலான அரசு தமிழகத்தின் கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, தமிழக மக்களின் பண்பாட்டு கலைகளான இசைக்கலை, நாட்டுப்புறக் கலைகள் மற்றும் அனைத்து பாரம்பரியமிக்க கலைகளும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கலை பண்பாட்டு மையம், அரசு இசைப் பள்ளி, கலை மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு வளாகம் கட்டப்படும்

10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை

இதேபோன்று தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் திருச்சி, திருவாரூர், திருநெல்வேலி உள்ளிட்ட 17 ஊர்களில் செயல்பட்டு வரும் 17 இசைப்பள்ளிகளில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவரம் பரநாட்டியம் போன்ற கலைகளை பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை எதுவும் வழங்கப்பட வில்லை. இதன்படி இந்த இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 200 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இசைப்பள்ளிகளில் பயிலும் 996 மாணவ, மாணவியர் பயனடைவார்கள். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 19 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+