தேர்தல் நடைபெறாத உள்ளாட்சி இடங்களுக்கு 27ம் தேதி மறு தேர்தல்- மனுத் தாக்கல் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் நடைபெறாத இடங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17,19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்கள் இறப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, சில இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு வருகிற 27-ந் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை மாநகராட்சி 15-வது வார்டு உறுப்பினர், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சித் தலைவர். கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சித் தலைவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பேரூராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் பதவியிடம்,
ஊரக உள்ளாட்சிகளில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், வார்டு எண்.1 உறுப்பினர் பதவியிடம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், வார்டு எண்.18, உறுப்பினர்கள் பதவியிடத்திற்கும், ஆகியவற்றிற்கு கட்சி அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
கட்சி அடிப்படையில்லாமல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், நத்தம்பேடு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும், காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஆற்பாக்கம் கிராம ஊராட்சி வார்டு எண்.9, விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் சே.கொத்தமங்கலம் கிராம ஊராட்சி வார்டு எண்.3, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மானூத்து கிராம ஊராட்சி வார்டு எண்.1 மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலன்குளம் கிராம ஊராட்சியின் வார்டு 1,5 மற்றும் 8-க்கான உறுப்பினர் பதவியிடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கான மனு தாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 16-ந் தேதி மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 17-ந் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெறும் நாள் 19-ந் தேதி, வாக்குப் பதிவு 27-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது. தேர்தல் நடவடிக்கைகள் 30-ந்தேதி முடிவடையும்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications