ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக பேரூராட்சி தலைவிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவியை வெடிகுண்டுவீசி கொலை செய்து விடுவதாக மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவியாக அதிமுகவைச் சேர்ந்த சிராஜ்நிஷா என்பவர் வெற்றி பெற்றார்.

கடந்த பல ஆண்டுகாளக திமுக வசம் இருந்த இந்த பேரூராட்சியை இந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றியுள்ளது.

இதனால் அத்திரமடைந்த திமுக கவுன்சிலர் பழனிவேல் மகன் அழகேசன் என்பவர் தனது செல்போன் மூலம் பேரூராட்சி தலைவி சிராஜ்நிஷாவின் கணவர் அஜ்மல்கானை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டி வெடிகுண்டுவீசி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இது குறித்து அதிமுக பேரூராட்சி தலைவி சிராஜ்நிஷா மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ராமநாதபுரம் எஸ்.பி.யை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+