தமிழக மீனவர் மீதான தாக்குதல் கவலை தருகிறது- ராஜபக்சேவிடம் பிரமர் பேச்சு

மாலத்தீவின் அட்டு என்ற இடத்தில் 17வது சார்க் மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் குழுமியுள்ளனர். ராஜபக்சேவும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சங்க்ரில்லா ரிசார்ட்டில் வைத்து ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. தமிழர் பிரச்சினை குறித்தும், இலங்கைக் கடற்படையினரின் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் கவலை தருவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ராஜபக்சேவை பிரதமர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இலங்கைத் தமிழர்களின் மறு குடியமர்த்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறும், தமிழ் மக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படுமாறும் ராஜபக்சேவை பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார்.
இதேபோல வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications