சுரங்க அதிபரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டினார் ஜெகன்: சிபிஐ விசாரணை தகவல்
கடப்பா: கடப்பா எம்.பி.யும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சுரங்க அதிபர் ஒருவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் என்ற தகவல் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஓபுலாபுரத்தில் கடப்பா எம்.பி.யும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்வது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பினாமிகள் பெயர்களில் சுரங்கத் தொழில் செய்து வரவதை சிபிஐ கண்டித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சுரங்க தொழில் அதிபர் ஒய். சதீஷ் சிபிஐயிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பபதாவது,
நான் ஒய்.எம். மகாபலேஸ்வரப்பா அன்சன்ஸ் என்ற பெயரில் சுரங்க நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனம் ஜனார்த்தன ரெட்டியின் சுரங்கத்தையொட்டி உள்ளது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டியும் பினாமிகள் பெயரில் சுரங்கம் நடத்தி வருகிறார். நான் 1978ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரை சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து இருந்தேன். அதை ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு மறு குத்தகைக்கு கொடுக்குமாறு கேட்டார். இதற்காக என்னை பெங்களூருக்கு அழைத்தார். அங்கு சுரங்க உரிமைகளை தனது பினாமி நிறுவனங்களுக்கு கொடுத்து விடுமாறு வற்புறுத்தினார்.
நான் மறுத்ததால் என் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு எனக்கு படபடப்பும், ரத்த அழுத்த நோயும், இருதயக்கோளாறும் ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 6 மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ஜெகனின் பினாமி நிறுவனங்கள் மூலம் அவரது மகதி நிறுவனத்திற்கு ரூ.49 கோடி, இந்திரா டெலிவிஷனுக்கு ரூ.30 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சட்டவிரோத சுரங்க ஊழலில் ஆந்திரா முன்னாள் சுரங்க இயக்குனர் வி.டி. ராஜகோபால், அவரது மருமகன் ராஜசேகர் ஆகியோருக்கும் தொடர்புள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications