நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலம்: தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த ஊரான இடைப்பாடி, நெடுங்குளம் சிலுவம்பாளையத்தில் இருக்கும் வீட்டுக்கு வந்தார்.
அங்கு தனது அம்மா, அண்ணனை பார்த்து விட்டு இடைப்பாடியில் நடந்த ஒரு கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நேற்றிரவே சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் 108க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின் சிலுவம்பாளையம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இந்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் அமைச்சர் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த மர்ம மிரட்டல் தொடர்பாக பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications