கிங்ஃபிஷருக்கு பெயில் அவுட்? - அனைத்து வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

மேலும் கிங்ஃபிஷருக்கு உதவ வங்கிகள் முயற்சி மேற்கொண்டால் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து இந்திய வங்கிப் பணியாளர் சங்கத்தின் தலைவர் சிஎச் வெங்கடாச்சலம் கூறுகையில், "கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு எதற்காக வங்கிகள் உதவ வேண்டும்? இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதியுள்ளோம். எந்த வங்கியும் எந்த வகையான கடனும் இனி கிங்பிஷருக்குத் தரக்கூடாது.
மேலும், எந்த வங்கியாவது மல்லையாவின் இந்த நிறுவனத்துக்கு கடன் தர முடிவு செய்தால் அதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் என எங்கள் சங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை, பங்குகள் பரிமாற்றத்தில் நடந்த திரைமறைவு வேலைகள் அனைத்தையும் பாராளுமன்றக் குழு மூலம் ஆராய வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications