வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கன மழை பெய்யும்

வடகிழக்கு பருவமழையினாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையாலும் கடந்த வாரம் வரை தமிழ்நாடு முழுவதும் கனமழை வெளுத்த வாங்கியது. கடந்த ஒருவாரகாலமாக வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளதால் தாழ்வான பகுதியில் தேங்கிய வெள்ள நீர் வடியத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் தமிழ்நாட்டில் மழை
இலங்கை, தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications