மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விட்டார் ஜெயலலிதா- சிபிஎம்
சென்னை: ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து பால், பஸ் கட்டண உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வுப் பரிந்துரை ஆகியவற்றுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஏற்கனவே விலை வாசி உயர்வு விண்ணைத் தொட்டு நிற்கிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது.
இந்த நிலையில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், மின் கட்டண உயர்வுக்கும அவர் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார் முதல்வர்.
இந்த விலை உயர்வு கட்டாயம் மக்களை பல வகையிலும் பாதிக்கும். எனவே இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications