கூடங்குளம் விவகாரம்-அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய குழு முடிவு செய்யும்- நெல்லை கலெக்டர் செல்வராஜ்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய குழு முடிவு செய்யும் என நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொது மக்களின் அச்சத்தை போக்குவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவும், மாநில அரசின் குழுவும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற கலெக்டர் செல்வராஜ் கூறுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஐஜி, எஸ்பியை கலந்து ஆலோசனை நடத்திய பிறகு பிற விபரங்களை தெரிவிப்பேன். மாநில நிபுணர் குழுவுக்கு நான் தலைவர் இல்லை. அதில் நானும் ஒரு பிரதிநிதி. அணுமின் நிலையம் தொடர்பாக மக்களின் பயத்தை போக்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய குழு முடிவு செய்யும் என்றார்.
அன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய குழுவின் பேச்சில் நம்பிக்கை வராததால் மாநிலக் குழு அங்கிருந்து வெளியேறியது. கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றிலும் பாதுகாப்பானது, கதிர்வீச்சு பயம் இல்லை என்று மத்தியக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications