கள் இறக்க அனுமதி- தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிய ஜெயலலிதா: கள் இயக்கம்
சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு உயர் மதுபானக் கடைகளை திறக்க மாநில அரசு முயற்சி செய்து வருகின்றது. தமிழக அரசின் இந்த செயலை கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் கூடுதலான மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை அரசு நீக்க வேண்டும். தடையை நீக்காவிட்டால் வரும் ஜனவரி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications