இளம் அரசியல்வாதிகளுடன் 'ஹோமோ' உறவு கொண்டார் ரணில்- அதிருப்தியாளர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

Ranil Wickramasinghe
கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே மீது அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள், பரபரப்பான பாலியல் புகாரைத் தெரிவித்துள்ளனர்.

தனது கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே ஓரினச் சேர்க்கைக்கு முயற்சித்தார் என்று அந்த புகார் கூறுகிறது.

இதுகுறித்து கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கேவிடம் அதிருப்தியாளர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுடன் தகாத உறவுக்கு ரணில் முயற்சித்தார். அதற்கு பத்திரன மறுத்ததால், அவரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து விட்டனர் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மனு கட்சியின் ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அத்தநாயக்கே தெரிவித்துள்ளார்.

ரணில் மீதான இந்த ஓரினச்சேர்க்கை புகார் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+