பெண்ணிடம் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பிய 7 பேர் கைது
தாராபுரம்: ஒரு பெண்ணை விபசாரத்துக்கு அழைத்து வந்து அவரிடம் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்த 7 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த பழையக் கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான்(21). அவருக்கு இதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(25), கார்த்தி(24), அப்துல் காதர் சந்தானி(23), அமீர் அமிஜாக்(28), மகேந்திரன்(30) மற்றும் கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்(24) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த 7 பேரும் ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருக்க விரும்பினர். இதற்காக ஒரு பெண்ணை பேசி ஏற்பாடு செய்தனர். ஆனால் அப்போது மகேந்திரன் மட்டும் வெளியூர் சென்றிருந்தார். இதனால் அவரை தவிர மற்ற 6 பேரும், விலைமாதுடன் அமராவதி ஆற்றில் உள்ள பழைய பாலம் பகுதியில் உல்லாசமாக இருந்தனர். நண்பர்கள் ஒரே பெண்ணிடம் உல்லாசமாக இருப்பதை மாறி மாறி வீடியோ எடுத்துக் கொண்டனர்.
7 பேரில் மகேந்திரனுக்கு மட்டும் திருமணமாகவில்லை என்பதால் தாங்கள் அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து போட்டு காட்டினர். அதனை பார்த்த மகேந்திரன் தனது செல்போனிலும் பதிவு செய்து கொண்டார். இந்த வீடியோ தாராபுரம் முழுவதும் வேகமாகப் பரவியது.
இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமாராவதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கோவில் அருகே 7 வாலிபர்கள் கூட்டமாக அமர்ந்து ஆபாச வீடியோ பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த 7 பேரையும் பிடித்து, அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் உல்லாச வீடியோ எடுத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தசாமி கூறியதாவது,
ஒரு பெண்ணை விபசாரத்துக்கு பயன்படுத்தியது, பெண்ணிடம் உல்லாசமாக இருந்தபோது வீடியோ எடுத்தது, அந்த காட்சிகளை மற்றவர்களுக்கு அளித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆபாச வீடியோ தாராபுரத்தில் வேகமாக பரவியுள்ளது.
இந்த ஆபாச வீடியோவை செல்போனில் வைத்திருப்போர் அதனை உடனடியாக அழித்துவிட வேண்டும். போலீஸ் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications