அரசு சலுகைகள் வேண்டி நெல்லை பல்கலை முன்பு 3வது நாளாக பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
நெல்லை: சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் (மூட்டா) சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் முன்பு இன்று 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் 500 சுயநிதி மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சுமார் 50,000 பேராசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த அரசு விதியும் பொருந்தாது எனவும், இதனால் மகப்பேறு விடுப்பு, பணி நியமனம் போன்றவற்றில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கும் அரசு சலுகைகள் வேண்டும், மேலும் சுயநிதி மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் (மூட்டா) சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் முன்பு 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த போராட்டத்தில் சுமார் 100 பேர் கொண்ட 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தலா 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. இன்று 3வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications