For Daily Alerts
Just In
ஜி.கே.பிள்ளைக்கு இந்துஸ்தான் நிறுவன இயக்குனர் குழுவில் இடம்!
டெல்லி: கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளைக்கு மத்திய எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் தரப்படவுள்ளது.
அதே போல முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஷ்யாம் சரணுக்கு இந்தியன் ஆயில் கார்ப்ரேசனின் இயக்குனர் குழுவில் இடம் தரப்படவுள்ளது.
மத்திய நிதித்துறையின் முன்னாள் செலவீணங்கள் பிரிவின் செயலாளர் சுஸ்மா நாத், ஸ்டேட் வங்கியின் முன்னாள் இயக்குனர் ஓ.பி.பட், ஐஐஎம்-அகமதாபாத்தின் முன்னாள் இயக்குனர் எஸ்.கே.பருவா ஆகியோருக்கு ஓ.என்.ஜி.சியின் இயக்குனர் குழுவில் இடம் அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பெயர்களுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அனுமதி அளித்துவிட்டதாகத் தெரிகிறது.
Comments
English summary
The government is likely to appoint former Home Secretary GK Pillai, former Foreign secretary Shyam Saran and former SBI Chairman O P Bhatt and several other bureaucrats as independent director on the boards of oil PSUs.
Story first published: Thursday, November 24, 2011, 16:53 [IST]