மும்பை விமான நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி: ராஜ்யசபாவில் தகவல் வெளியானது
டெல்லி: மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுருந்ததாக மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவர் மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிராதிகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறைக்கு தகவல் எதுவும் கிடைத்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதில் அளிக்கையில் கூறியதாவது,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை சர்வதேச விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications