போலீஸ் தேர்வுக்கான கேள்வித் தாள் அவுட் விவகாரம்: ஏட்டு டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் நடந்த போலீஸ் தேர்வின் போது கேள்வித் தாள் வெளியான விவகாரத்தில் ஏட்டு பாண்டியை மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த போலீஸ் தேர்வின் போது கேள்வித் தாள் அவுட்டானது. இதில் மதுரை கரிமேடு போக்குவரத்து போலீசில் ஏட்டாக பணிபுரியும் பாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து பாண்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் இவருக்கு கிடைக்க வேண்டிய 2 "இன்கிரிமென்ட்' நிறுத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து பாண்டி மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் கமிஷனர் பாண்டியை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications