கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி, சென்னை வரும்போது வரவேற்பு அளிக்கப்படும்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Kanimozhi
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் சென்னை வரும் வரவேற்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ராஜ்யசபா எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி 2 ஜி ஸ்பெட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழி ஜாமீன் கோரி பலமுறை நீதிமன்றக் கதவை தட்டியும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை ராசாத்தி அம்மாளிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.

கட்சியில் பதவி?:

கனிமொழிக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அது பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

ராசாவின் ஜாமீன் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு ஜாமீன் பற்றி ராசா எதுவும் பேசவில்லை என்று கருணாநிதி கூறினார்.

வரவேற்பு அளிக்க முடிவு:

ஆறுமாத காலம் திகார் சிறையில் இருந்து விட்டு வரும் கனிமொழிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கனிமொழி சென்னை வரும் போது கண்டிப்பாக வரவேற்பு அளிக்கப்படும் என்றார் கருணாநிதி.

கனிமொழியுடன் தொலைபேசியில் கருணாநிதி பேச்சு:

இந் நிலையில் கனிமொழியுடன் கருணாநிதி தொலைபேசியிலும் பேசினார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுகவினர் இனிப்பு வழங்கி கனிமொழியின் ஜாமீன் விடுதலையைக் கொண்டாடினர்.

பெரிய நிம்மதி-டி.ஆர்.பாலு:

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. கருணாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு நிம்மதியை அளிக்கக் கூடியது என்றார்.

திமுக-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பாலு பதிலளித்தார்.

திமுக எம்பியான டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், இந்த வழக்கில் கனிமொழி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+