கார் கவிழ்ந்து ஒசூர் நகராட்சி அதிமுக தலைவர், மனைவி உள்பட 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் ஒசூர் நகராட்சி துணைத் தலைவர்(அதிமுக) உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஒசூர் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த பாஸ்கரன். அவர் தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் நாகர்கோவிலில் இருந்து ஒசூருக்கு டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூர் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி டாடா சுமோ கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒசூர் நகராட்சி துணைத் தலைவர் பாஸ்கரன், அவரது மனைவி சைலஜா மற்றும் அவர்களது உறவினர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நகராட்சி துணைத் தலைவர் பாஸ்கரனின் மகள் ஷாலினி(12), டிரைவர் சாந்தகுமார், உறவினர் பழனிக்குமார் ஆகியோர் படுகாயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+