டிசம்பரில் மதுபானங்கள் விலையை உயர்த்த அரசு முடிவு
நெல்லை: தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் முதல் எலைட் மதுபானங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 8 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைய தேதிக்கு படு லாபகரமாக இயங்கி வரும் அரசு அமைப்பு எது என்றால் அது டாஸ்மாக்தான்.
பல லட்சம் பேரை தள்ளாட வைத்தாலும், தள்ளாட்டமே இல்லாமல், 9வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள டாஸ்மாக் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் எலைட் ஷாப்கள் திறப்பதுடன் மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆலோசனைக்கூட்டம்
இது தொடர்பாக சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா தலைமையில் மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் டாஸ்மாக் கடைகள் மூலம் இன்னும் கூடுதல் வருவாயை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மதுபானங்கள் விலை உயர்த்துவது குறித்தும், கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்காணித்து தடுப்பது குறித்தும் மண்டல, மாவட்ட அதிகாரிகளுடன் யோசனை கேட்கப்பட்டது. அனைத்து அதிகாரிகளும் மதுபானங்கள் விலையை உயர்த்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்காண்டு வருமானம் உயர்வு
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி வரை தனியார் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. நவ 29ம் தேதி முதல் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பஞ்சாயத்து கிராமப்பகுதிகளில் 6 ஆயிரத்து 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 2003ம் ஆண்டு வரை ரூ.2 ஆயிரம் கோடி அளவில் ஆண்டு வருவாய் கிடைத்த வந்த நிலையில் 2010-2011ம் ஆண்டில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் தமிழக அரசிற்கு மதுபானங்களின் கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்டவைகள் மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications