ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் வெற்றி ரத்தாகுமா?-டிசம்பர் 7ல் தெரியும்
சென்னை: ரிஷிவந்தியத்தில் தான் பெற்ற வெற்றியை ரத்து செய்யக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் வரும் டிசம்பர் 7ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நான் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தேன். சில காரணங்களைக் கூறி அதிகாரிகள் எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். அதிகாரிகளின் தவறால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. எனவே, விஜயகாந்தின் வெற்றியை செல்லாது என்று அறிவித்து அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இதில் விஜயகாந்தும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
அதிகாரிகளால் ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடி ஆனதற்கும், நான் பெற்ற வெற்றிக்கும் தொடர்பு இல்லை. எனவே, எனது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
இதற்கு ஜெயந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications