எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ரூ.520 ஓய்வூதியம்-கேரளா அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 520 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளா மாநிலத்தில்தான் ஹெச்ஐவி நோயாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் குறிப்பின்படி, கேரள மாநிலத்தில், 55,167 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருச்சூர் மாநிலத்தை தொடர்ந்து பாலக்காடு மாவட்டத்தில் அதிகளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி திருவனந்தபுரத்தில் பத்திரி‌கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

மாத ஓய்வூதியம்

சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், மாநிலத்தில் இந்நோயை அறவே அகற்றும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 400 பென்சன் வழங்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த பென்சன், எய்ட்ஸ் பாதித்த நோயாளிக்க‌ோ அல்லது அவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ வழங்கப்படும். நோய் பாதித்தவர், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்லும்போது அவருக்கு பயணப்படியாக ரூ. 120 கூடுதலாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக உம்மன்சாண்டி தெரிவித்தார்.

நாட்டிலேயே முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம் கேரளாவில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+