மதுரை திமுக பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி மீதான குண்டர் சட்டம் ரத்து
மதுரை: மதுரை திமுக பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி மீதான குண்டர் சட்டத்தை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக மதுரை திமுக பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்பு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மின்னல்கொடியின் மனைவி ஜெயலட்சுமி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது கணவர் மின்னல்கொடி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாட்சா, என்.வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மனுதாரரின் கணவரது கருணை மனுவை பரிசீலனை செய்ததில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மின்னல்கொடி மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பல திமுக நிர்வாகிகள் மீது தமிழக போலீசாரால் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications