கடன் தொல்லை: பெங்களூரில் குடும்பத்தோடு டாக்டர் தற்கொலை

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூர், சாம்ராஜ்பேட்டையை அடுத்த வால்மீகி நகரை சேர்ந்தவர் டாக்டர் அமானுல்லா கான்(60). இவரது மனைவி நவீதாபானு(50). இவர்களுக்கு அயாத் ரஷீத்(28), ஆபமா ரஷீத்(26) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த குடும்பத்தினரின் 4 மாடிகளை கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். வீட்டின் 2 மாடிகளில் மருத்துவமனையும், மற்ற மாடிகளில் அமானுல்லா குடும்பத்தினரும் வசித்து வந்தனர். மேலும் மைசூர் ரோடு சாமண்ணா கார்டனிலும் இன்னோரு கிளினிக் இருந்தது.
அயாத் ரஷீத் எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்து டாக்டராக பணியாற்றி வந்தார். அமானுல்லாவின் கிளினிக்குகளை அவரும், மகன் அயாத் ரஷீத்தும் கவனித்து வந்தனர். ஆபமா ரஷீத் கோலாரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அமானுல்லாவின் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கிளினிக்கில் வேலை செய்யும் நர்சு லட்சுமி வழக்கம் போல வேலைக்கு வந்தார். அப்போது கிளினிக் நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. கிளினிக்கை திறக்க சாவியை வாங்க லட்சுமி மேல்மாடிக்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த கட்டிலில் அமானுல்லா, அவரது மனைவி நவீதா பானு, 2 மகன்கள் ஆகியோர் பிணமாக கிடந்தனர். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி, அக்கப்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாம்ராஜ்பேட்டை போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அமானுல்லா 2 பெண் குழந்தைகளை தந்தெடுத்து வளர்த்து வந்தார். அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது.
இன்னொரு பெண்ணாக நாசீயா(18) வீட்டின் இன்னொரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். நாசீயா தூங்கிய அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், அமானுல்லா குடும்பத்தினரின் தற்கொலை குறித்து அவருக்கு தெரியவில்லை.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அமானுல்லாவின் மகன்களின் படிப்பிற்காகவும், புதிய கிளினிக் துவங்கவும் ரூ. 2 கோடிக்கும் மேலாக கடன் பெற்றிருந்தது தெரிய வந்தது. குடும்பத்தினர் இறந்து கிடந்த அறையில் தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை போலீசார் கைப்பற்றினர். தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.
கடன் தொகையை திரும்ப செலுத்த அமானுல்லா தனது பெரிலும், மனைவியின் பெயரிலும் இருந்த சொத்துகளை விற்றார். ஆனால் முழு கடனையும் செலுத்த முடியாமல் இறுதியில் அமானுல்லாவின் குடும்பத்தினர் விஷ ஊசியை போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையி்ல் தெரிய வந்தது.
இது குறித்து பெங்களூர் துணை கமிஷனர் சோனியா நாரங் கூறியதாவது,
அமானுல்லா குடும்பத்தினர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்திருக்கலாம். அமானுல்லாவின் குடும்பத்தினர் வாங்கிருந்த கடன்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications