ஹரியானாவில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி 'எஸ்கேப்'
ஹரியானா: ஹரியானாவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. ஆனால் விமானி பாராசூட் குதித்து உயிர் தப்பினார்.
ஹரியானா மாநிலம் சிரசா விமான தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் ஒன்று நேற்று பகல் 12.30 மணிக்கு ஆய்வுக்காக விண்ணில் பறக்கவிடப்பட்டது. சிரசா பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மனியா என்ற கிராம பகுதியின் மீது விண்ணில் பறந்து கொண்டிருந்த போது, விமான இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விமானி ஜெயதீப் பாராசூட் மூலம் வெளியே குதித்தார். அதில் விமானம் மனியா பகுதியில் உள்ள வயல் ஒன்றில் விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்திய விமான படையை சேர்ந்த 7 போர் விமானங்கள் இந்த ஆண்டு கீழே விழுந்து நொறுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications