செவ்வாயில் உறைந்த நிலையில் தண்ணீர்!
Subscribe to Oneindia Tamil
நாசா: செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பன குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவற்றின் மேற்பரப்பில் பனி துகள்கள் இருப்பதால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு உறைந்த நிலையில் ஐஸ் கட்டி புதைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. ஐரோப்பியன் விண்வெளி கழகம் “இ.எஸ்.ஏ." எக்ஸ்பிரஸ் விண்வெளி ஓடத்தை அனுப்பியுள்ளது. அதன் சக்தி வாய்ந்த கேமரா செவ்வாய் கிரகத்தின் போட்டோக்களை அனுப்பியுள்ளது.
அதில் அந்த கிரகத்தின் வடகிழக்கில் மலைகளில் ஐஸ்கட்டிகள் வளைவுகளாக உறைந்து புதைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இவை பனி பாறைகளாகவும் இருக்கலாம் என கருத்தும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications