வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை அபகரித்ததாக பொன்முடி மீது புகார்
விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சூர்யா கல்வி நிறுவனத்திற்காக கீழக்கொந்தை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 1.58 சென்ட் நிலத்தை அபகரித்ததாக அவர் மீது விழுப்புரம் கலெக்டர் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது ஏற்கனவே நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. நில அபகரிப்பு வழக்கில் கைதாகி அவர் ஜாமீனில் விடுவிகக்ப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியைச் சேர்ந்த ரங்கநாத பட்டாச்சாரியாரின் மகள் ஆர். மல்லிகா விழுப்புரம் கலெக்டர் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பொன்முடி மற்றும் சூர்யா கல்வி நிறுவனத்தின் தலைவர்கள் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
கீழக்கொந்தை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 1.58 சென்ட் நிலத்தை பொன்முடி சூர்யா கல்வி நிறுவனத்திற்காக அபகரித்துக் கொண்டார். கோவில் நிர்வாகியும், எனது சகோதரருமான சீனுவாசன் பட்டாச்சார்யார் பொன்முடி கொடுத்த தொல்லையால் மனமுடைந்து மனஉளைச்சலால் கடந்த 28-6-2008 அன்று இறந்தார். எனவே, இந்த விவகாரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் கீழக்கொந்தையில் உள்ள 5 ஏக்கர் மற்றும் 92 சென்ட் நிலத்தின் மூலம் கோவிலுக்கு வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications