தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பிய கிங்ஃபிஷர் விமானம்
சென்னை: 160 பயணிகளுடன் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற கிங்ஃபிஷர் விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.
கிங்ஃபிஷர் விமானம் ஒன்று 160 பயணிகளுடன் இன்று காலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அந்தமான் சென்றது. அந்தமானை அடைந்ததும் விமானம் தரையிங்க முயன்றது. ஆனால் அங்கு வானிலை மோசமாக இருந்ததால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. விமானம் சற்று நேரம் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
விமானி எவ்வளவோ முயன்றும் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து விமானம் காலை 9.30 மணிக்கு சென்னைக்கு திரும்பி வந்தது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் நாளை தான் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் இருந்து சென்னைக்கு வரக் காத்திருந்த 147 பயணிகள் விமானம் திரும்பியதால் ஏமாற்றம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications