தஞ்சையில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை, 2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுற்றி திரிந்த பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், முனியாண்டவர் காலனியை சேர்ந்தவர் அலெக்ஸ் (34). அதே பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்தவர். இந்த நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் அருகே அலெக்ஸ் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழியில் தடுத்து நிறுத்திய 2 மர்மநபர்கள், பயங்கர ஆயுதங்களால் அலெக்சை சரமாரியாக வெட்டினர். அதன்பிறகு 2 மர்மநபர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அலெக்ஸ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அலெக்சின் தம்பியும் இதேபோல வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே முன்விரோதம் காரணமாக அலெக்ஸ் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அலெக்சை வெட்டி கொலை செய்த 2 பேரும் வல்லம் பகுதியில் கரும்புக் காட்டுக்குள் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்ததுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications