கேரளக்காரரான ஏடிஜிபி ஜார்ஜ் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்- வெளியேற விவசாயிகள் கோரிக்கை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேனி மாவட்ட மக்கள் வரலாறு காணாத வகையிலான மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர் ஊராக தாங்களாகவே கிளம்பி குமுளியை நோக்கி பேரணி நடத்தி கேரள அரசின் விஷமத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் தாங்களாகவே திகழ்வதாலும், பெரும் கொந்தளிப்புடன் இருப்பதாலும் போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை. மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கம்பம் வந்துள்ளார். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பது குறித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிப்பது பற்றி, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கிராம சபை கூட்டங்களுக்கு சென்று மக்களை சமாதானப்படுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
ஏடிஜிபி ஜார்ஜுக்கு திடீர் எதிர்ப்பு
இந்த நிலையில் தற்போது கூடுதல் டிஜிபி ஜார்ஜுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழகத்தின் உரிமைக்காக மக்கள் போராடி வரும் இடத்திற்கு அவர் வந்துள்ளதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
அவரது தலைமையிலான போலீஸார் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர். இதனால்தான் இன்று கம்பம் மெட்டில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அமைதியான முறையில் பேரணி சென்றவர்களைத் தடுத்து தடியடி நடத்தியுள்ளது ஏன்.?
கேரளாவில் அரசியல்வாதிகள், வக்கீல்கள், காவல்துறையினர் அந்த மாநில மக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன்தான் தமிழர்களை அங்கு தாக்குகிறார்கள். இங்கு மட்டும் எங்களை ஏன் தாக்குகிறார்கள் என்று கேட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications