ஒட்டன்சத்திரத்தில் காய்கறிக் கடைகள் மூடல்-ரூ. 5 கோடி வர்த்தகம் பாதிப்பு- ஒரு காயும் கேரளா போகவில்லை

Subscribe to Oneindia Tamil

Oddanchathram Vegetable Market
ஒட்டன்சத்திரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட் இன்று மூடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவுக்கு இங்கிருந்து ஒரு காயமும் இன்று போகவில்லை.

தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்று ஒட்டன்சத்திரத்தில் உள்ளி காந்தி காய்கறி மார்க்கெட். இங்கிருந்துதான் கேரளாவுக்கு பெருமளவில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை போகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 1000 டன் காய்கறிகள் இங்கிருந்து கேரளாவுக்கு ஏற்றுமதியாகின்றன.

கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை பிடிவாதத்தால் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஒட்டன்சத்திரம் மாவட்டத்திற்கு வரும் கேரள வியாபாரிகள் பெருமளவில் நின்று விட்டனர். மேலும் இங்கிருந்து கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்புவதையும் வியாபாரிகள் நிறுத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து இன்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை கடையடைப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 200 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கேரளாவுக்கு ஒரு காயும் போகவில்லை. இந்த கடையடைப்பு காரணமாக கேரளாவுக்குப் போக வேண்டிய ரூ. 5 கோடி மதிப்புள்ள காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பவில்லை.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வர்த்தகப் பாதிப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் கேரள அரசு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறையை கடுமையாக கண்டிக்கிறோம். கேரள அரசின் பிடிவாதம் தொடர்ந்தால் இங்கிருந்து ஒரு காயையும் அனுப்ப மாட்டோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+