தமிழக புதிய அமைச்சர்களாக பா.வளர்மதி,எம்.எஸ்.எம். ஆனந்தன் பதவியேற்றனர்
சென்னை: தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள பா.வளர்மதி, ஆனந்தன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2வது மனைவி டாக்டர் ராணி கொடுத்த மோசடி,மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் பேரில் இந்து அறநிலையத்துறை, சட்ட அமைச்சராக இருந்த மு.பரஞ்சோதி மீது திருச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பரஞ்சோதி பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சராக இருந்த செல்வி ராமஜெயத்தையும் முதல்வர் ஜெயலலிதா பதவியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து புதிய இந்து அறநிலையத்துறை அமைச்சராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். சமூக நலத்துறைக்கு பா.வளர்மதி நியமிக்கப்பட்டார்.
இருவரும் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் இருவருக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம், ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications