தமிழ்நாடு காய்கறி தராததால், கேரளாவில் தக்காளி ரூ.200, கத்தரிக்காய் ரூ.160
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைபட்டுள்ளதால் கேரளத்தில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தடை நீட்டிக்கும் பட்சத்தில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவின் காய்கறித் தேவையை நிறைவேற்றுவது தமிழ்நாடுதான். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து நாளொன்றுக்கு 500 டன் காய்கறிகள் வரை கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும். தவிர கோவை, நாகர்கோவில், உள்ளிட்ட மாவட்டங்களின் காய்கறிச்சந்தைகளில் இருந்தும் ஏராளமான காய்கறிகள் லாரி மற்றும் டெம்போ வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
வியாபாரிகள் வருகை பாதிப்பு
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகம்- கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டதை அடுத்து வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வியாபாரிகளும் கேரளாவிற்கு காய்கறிகளை அனுப்பப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதனால் கேரளா சந்தைகளில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தக்காளி கிலோ 200 ரூபாய்
அங்கு ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு முருங்கை 60 ரூபாயாகவும் ஒரு கட்டு கொத்தமல்லி 20 ரூபாய், கருவேப்பிலை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications