ரூபாயின் மதிப்பு சரிந்ததால் 65 பைசா உயர்த்தப்படும் பெட்ரோல் விலை!
டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் செலவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலை இன்றிரவு முதல் லிட்டருக்கு 65 பைசா வரை உயர்தப்படவுள்ளது.
தமிழகத்தில் வரியையும் சேர்த்து விலை உயர்வு லிட்டருக்கு 75 பைசா உயரும் என்று தெரிகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ள கடந்த 2010 ஜூன் மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, கச்சா எண்ணெய்யின் சராசரி விலையை கணக்கில் கொண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பெரிய அளவில் உயராத நிலையிலும் பெட்ரோல் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதே காரணமாகும்.
ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதால், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 54.17 ஆகிவிட்டது.
இதனால், ஒரு லிட்டர் பெட்ரோலை விற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 55 முதல் 56 பைசா வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடுகட்ட விலை உயர்த்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தந்தால், இன்றிரவு முதலே விலை உயரலாம்.
விரைவில் பெட்ரோல் மீது ரூ. 2 பசுமை வரி?:
இந் நிலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதில் பெட்ரோல் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறி, அதைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், பெட்ரோல் மற்றும் கார்களின் மீது பசுமை வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.2 உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications