நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசிய வழக்கு- விசாரிக்க நீதிபதி மறுப்பு
சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாலளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் புதுச்சேரி நீதிமன்ற நீதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பேரம் பேசிய வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை விசாரிக்கும் நீதிபதி ராமசாமியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருடன், பேரம் பேசிய டேப் வெளியானது.
இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா, புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.
ஆனால், தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி சுகுணா விசாரிக்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி முருகேசன் மறுத்துவிட்டார். சங்கராச்சாரியார் மற்றும் நீதிபதி ராமசாமி இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோவை விசாரிக்கும் கமிட்டியில் நானும் உள்ளதால், இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியாது என்று நீதிபதி முருகேசன் கூறிவிட்டார்.
இதனால் இந்த விசாரணையை வேறு நீதிபதி கொண்ட பெஞ்சுக்கு மாற்றுமாறும் தலைமை நீதிபதியை நீதிபதி முருகேசன் கேட்டுக் கொண்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications