நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசிய வழக்கு- விசாரிக்க நீதிபதி மறுப்பு
சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாலளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் புதுச்சேரி நீதிமன்ற நீதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பேரம் பேசிய வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை விசாரிக்கும் நீதிபதி ராமசாமியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருடன், பேரம் பேசிய டேப் வெளியானது.
இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா, புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.
ஆனால், தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி சுகுணா விசாரிக்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி முருகேசன் மறுத்துவிட்டார். சங்கராச்சாரியார் மற்றும் நீதிபதி ராமசாமி இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோவை விசாரிக்கும் கமிட்டியில் நானும் உள்ளதால், இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியாது என்று நீதிபதி முருகேசன் கூறிவிட்டார்.
இதனால் இந்த விசாரணையை வேறு நீதிபதி கொண்ட பெஞ்சுக்கு மாற்றுமாறும் தலைமை நீதிபதியை நீதிபதி முருகேசன் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications